இன்றைய வசனம்

Vaathai vunthan koodaarathai anugaathu

வாதை உந்தன் கூடாரத்தை :
வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
1. உன்னதமான கர்த்தரையே
உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை
ஆதாயமாக்கிக் கொண்டாய்
2. ஆட்டுக்குட்டி இரத்ததினால்
சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு
அன்றாடம் வெற்றி உண்டு நமக்கு
3. கர்த்தருக்குள் நம் பாடுகள்
ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன்
அதிகமாய் செயல்படுவோம்
4. நம்முடைய குடியிருப்பு
பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை
எதிர்நோக்கி காத்திருப்போம்
5. அழைத்தவரோ உண்மையுள்ளவர்
பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்
குற்றமின்றி காத்திடுவார்
6. அற்பமான ஆரம்பத்தை
அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார்
சொன்னதை செய்திடுவார்
7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல
ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்

Tamil Bible Study

I am Always With you JESUS
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமை ப்படும் படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகா விட் டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடு க்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலக த்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத் துக் கொள் ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின் பற்ற க்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழிய க்கார னும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவான வர் கனம்பண்ணுவார்.( John 12: 23-26 )

இங்கு யேசு தனது மரணம்நெருங்கி விட்தென்பதை அறிந்து தான் நிச்சயமாக மரணமடைவதில்லை என்பதை மறைமுகமாக தனது சீடர்களுக்குவெளிப்படுத்துகின்றார். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்தால் அது முளைப்பதற்குத் தேவையான காற்று, ஈரப்பதன், உரியவெப்பம் என்பன கிடைக்குமாயின் அந்த விதை முளைத்து தனது பெற்றோரைப் போன்ற மேனியைப் பெற்று உரிய காலத்தின் தன் பலனைக் கொடுக்கும். அது முப்பதும், அறுபதும், நூறுமாகப் பலன் கொடுக்கும்.

இப்பொழுது அந்த நிலத்தில் விழுந்த கோதுமை மணிக்கு என்ன நடந்த்து அதைத் தேடினால் கண்டுபிடிக்க முடியாது. அது உருமாற்றம் அடைந்து புதிய மரமாக ஜீவனுடன் இருப்பதைக் காணலாம்.

இவ்வாறே தனக்கும் நடக்கும் என்பதை இந்த உவமைமூலம் இயேசு மிகவும் சிறப்பாக விளக்குகின்றார். தான் மரணத்தின் மூலம் நிரந்தரமாக அழிவடைவதில்லை என்றும் குறிப்பிட்ட காலத்தில் தான் உயிரடைந்து நித்தியமாக வாழ்வேன் என்பதையும் மிகவும் சிறப்பாக அந்த உவமைமூலம் வெளிக்காட்டு கின்றார். இந்த உலகத்தில் தனது ஜீவனைப் பெரிதாக எண்ணாமல் கர்த்தரே பெரியவர் என்று எண்ணி அவருக்காக மரணத்தைத் தழுவிக் கொள்ளும் எவனும் யேசுவைப்போன்று உயிரடைய முடியும், ஆனால் உலக இச்சைகளில் தனது விருப்பம்போல் ஈடுபட்டு மரிப்பவனின் வாழ்வில் அவனால் மீண்டும் உயிரடைய முடியாது. எனக்கு ஊழியம்செய்கிறவன் என்னைப் பின்பற்றக்கடவன் என்று இயேசு கூறினார். காரணம் இயேசுவைப்போல் அவனும் ஒருநாள் மரித்தாலும் உயித்தெழுவான். நிச்சயமாக பிதாவும் அவனைக் கனப்படுத்துவார். ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத் தாலொழிய உயிர்க்கமாட்டாதே. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தி னுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொ ன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங் களு டைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம்வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே; மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீன முள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப் பட்ட வரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும் மண்ணா னவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம். சகோதரரே, நான் சொல் லுகிற தென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பது மில்லை. (1Cor 15:35 -50)

ஏன் இயேசுக்கிறிஸ்து மரணமடைவேண்டும்? பாவம் பூமியிலுள்ள மனிதர்களுள் புகுந்தபடியால் மனிதனை மீட்கும்படியாக கிறிஸ்து மரணமடையவேண்டியதாயிற்று.

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்து மாவா னான். தேவனாகிய கர்த்தர் மனுஷனை. ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆனால் இந்த கட்டளைக்கு கீழ்படியாமல் நன்மை தீமை அறியும் கனியை புசிக்கும்படி பிசாசா னவன் வஞ்சனையாகஏவாளை ஏமாற்றினது. அதை நம்பி கர்த்தரின் கட்டளையை ஏவாள்மீறினாள். தான்மட்டும் கட்டளையை மீறினது மல்லாமல் தனது கணவனாகிய ஆதாமையும் கட்டளையை மீறும் படிசெய்தாள்.

அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

இப்பொழுது அவர்களுடைய ஆவிக்குரிய கண்கள் மூடப்பட்டு பூமிக்குரிய கண்கள்திறக்கப்பட்டன. அதேவளை அவர்களின் பரிசுத்த அலங்கார வஸ்திரம் களையப்பட்டு விட்டதனால் தாங்கள் நிர்வா ணிகள் என்று அறிந்துகொண்டார்கள். அவர்கள் அழியாமையு டைய வர்களாய் உருவாக்கப்பட்டார்கள், ஆனான் பிசாசின் சொல்லுக்குச் செவிகொடுத்தபடியால் அழிவைப்பெற்றுக் கொண்டார்கள். இங்கு நாங் கள் அவதானிக்கவேண்டியது என்னவென்றால் ஆதாமும் ஏவாளும் வஞ்சிக்கப்பட்டார்கள். பிசாசானவன் கர்த்தருடைய பிள்ளைகளை அவர்களுக்குத் தெரியாமலேயே வஞ்சித்து கர்த்தரின் கட்டளை ளைமீறச் செய்து நித்திய வாழ்விலிருந்து விழச்செய்கிறான்.ஆகவே நிற்கிறேன் என்று நினைக்கிற நான் விழுந்துவிடாதபடி மிகவும் எச்சரிக்கையுடன் கிறிஸ்துவின் ஐக்கியத்தோடு வாழவேண்டும்.


மேலேகாட்டப்பட்டபடத்தை மிகவும் அவதானமாக்க் கவனிப்போம். பிதா, கமாரன், பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய திரித்துவத்தைக் குறிக்கின்றது. பிதாவை எவராலும் காணமுடியாது, ஆனால் இயேசு என்றவடிவில் மனிதர்களுடன் அவர் உறவாடினார், பின்பு அவர் மனிதர்களுடைய பாவங்களுக்காக மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயித்தெழுந்த கிறிஸ்து நாற்பதுநாட்கள் மனிதர்களுக்கு காட்சிகொடுத்தார், நாற்பதாம் நாள் பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். தான் இல்லாத இடத்தை நிரப்புவதற்காக பரிசுத்த ஆவியானவரை உலகிற்கு அனுப்பினார்.பத்தாவது நாள் அதாவது உயித்தெழுந்து ஐம்பதாவது நாள் பரிசுத்த ஆவியானவர் சீடர்கள்மீதும் விசுவாசிகள்மீதும் ஊற்றப்பட்டார். இவர்கள் மூவரும் ஒருவரே அதாவது இறைவனே, ஆனாலும் மூவரும் வித்தியாசமானவர்கள். இப்பொழுது யார் யார் இயேசுவைக் கிறித்து என்று ஏற்றுக் கொள்ளிறார்களோ அவர்களுடன் பரிசுத்த ஆவியானவர் வாசம்செய்கிறார்.

இப்பொழுது ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தவுடன் அவர்களில் காணப்பட்ட ஆவியின் செயற்பாடு செயலற்றுவிட்டது. ஆவியினால் மட்டும்தான் இறைவனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளமுடியும். பாவம்செய்தவுடன் மனிதனின் ஆவி மரித்துவிட்டது. இதனாலேயே ஆதாமுக்கும் கர்த்தருக்கும் இடையில் பிரிவினை ஏற்பட்டது. இப்பொழுது ஆதாமுடைய ஆத்துமா சரீரம் சொல்வதையை செய் கின்றது. சரீரம் மண்ணுக்க்குரியது அது மண்ணுக் குரிய செயற்பாடு களையே செய்யவிரும்பும், அதனையே ஆத்துமாசெய்யும்.

ஆவி,ஆத்தமா,சரீரம் மூன்றும் சேர்ந்தே மனிதன் என்று அழைக்கப்படும்.ஆவியும் ஆத்துமாவும் வெவ்வேறானதல்ல இரண்டும் ஒன்றானது. ஆனால் அவற்றின்செயற்பாடுகள் வித்தியாச மானவை. ஆவி செயலற்றுக் காணப்படுமானால் இறைவனுடன் தொடர்புகொள்ளமுடியாது.. சரீரத்தின் விருப்பத்தையும் ஆவியின் விருப்பத்தையும் ஆத்துமா செயற்படுத்தக்கூடியது. சரீரம் பூமிக்குரிய காரியங்களையை அதிகம் வாஞ்சிக்கும். ஆவியானது எப்பொழுதும் விண்ணுக்குரிய செயற்பாடுகளையே வாஞ்சிக்கும். எப்பொழுது சரீரம் இறைவனுக்கு விருப்பமில்லாத காரியங்களைச் செயற்படுத்த முனைகிறதோ, அவ்வேளைகளில் ஆவியானது இறைவனுக்கு விருப்பமில்லாதசெயற்பாடுகள் பாவமானது, அவற்றைச் செய்ய வேண்டாம் என்று இருதயத்தில் பேசிக் கொண்டேயிருக்கும். அந்த சத்தத்திற்கு நாம் கீழ்படியும் போதெல்லாம் பாவத்திலிருந்து தப்பிக் கொள்ளுவோம். சில சமயங்களில் சிறிய பொய் சொல்ல வேண்டி ஏற்படும் போது பொய் சொல்லுவது பாவம் என்று ஆவி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருக்கும், ஆனாலும் தப்பித்துக் கொள் வதற்கு வேறு வழியில்லை, இது சின்னப் பொய்தானே இந்த ஒருமுறைதான் சின்னப் பொய்யைச் சொல்லலாம் என்று சரீரமானது ஆத்துமாவைத் தூண்டிக் கொண்டேயிருக்கும். இந்த நிலமையில் சரீரத்தின் பக்கம் ஆத்துமா சேர்ந்துகொள்ளுமாயின் அந்த பாவத்தை சரீரம்செய்து முடிக்கும். இந்த நிலமையில் ஆவியானது துக்கமடைந்த நிலையில் காணப்படும். இவ்வாறான பாவச்செயற்பாடுகளை சரீரமும் ஆத்து மாவும் செய்து கொண்டேயிருக்குமாயின் ஆவியின் செயற்பாடு தானானவே செயலற்ற நிலைக்குச் சென்று விடும். அதன்பின்பு எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் அதுபாவம், அதைச் செய்ய வேண்டாம் என்று சொல்வதற்கு மனச்சாட்சி எங்களுடன் பேசமாட்டாது. சரீரம் விரும்பியபடி பாவத்தில் ஜீவிக்கமுடியும்.

இந்தநிலை இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் பாவம் காணப்படுவதால் இருவரும் இணைவதற்குப் பாவம் தடையாக்க் காணப்படுகிறது. இந்த இறைவனற்ற மனித வாழ்வானது அவனை நித்திய மரணத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த நிலையிலேயே உலகில் அனேகர் ஜீவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலமை ஏற்பட்டபடியினாலேயே ஆதாமும் ஏவாளும் இறைவனைவிட்டுத் தூரமாக ஜீவித்தார்கள். இந்த நிலமையில் இருந்து மீள்வதற்கு என்னவழியுண்டு? ஒரேயொருவழிதான் அதற்காக பிதாவாகிய கர்த்தர் ஏற்பாடுசெய்துள்ளார். அது தான் தன்னுடையசொந்தக்குமாரன் என்றும் பாராமல் இயேசுக் கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பி பாவப்பலியாக அவருடைய திருஇரத்தைச்சிந்தி உன்னையும் என்னையும் மீட்பதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளார் .

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும் என்று இயேசு கூறினார். உண்மையில் ஒரு விதையான நடப்பட்டு அதற்கு நீர் ஊற்றிவருவோமாகில் அது உரிய காலத்தில் முளைத்து வளர்ந்து பலன்கொடுக்கும். ஆனால் நாம் நாட்டிய கோதுமை மணியை எம்மால் பார்க்க முடியாது, ஆனால் அது மரிக்கவில்லை ஜீவித்துக் கொண்டேயிருக்கிறது.அது தன்னைப்போல பல நூற்றுக்கணக்கான விதைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும். இந்த உலகத்தில் வாழும்போது இதையே நாம்செய்யவேண்டும் என்று இயேசு விரும்பு கின்றார். நீ ஜீவிக்கும் இந்தக்கொஞ்சக்காலத்தில் உனக்காக வாழாமல் இயேசுவிற்காக வாழவேண்டும் என்று இயேசு விரும்பு கின்றார். உன்னுடைய மாமிச இச்சைகளுக்காக வாழாமல் உன்னை உருவாக்க கர்த்தருக்காக வாழவாயா? பாவத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் மனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக வாழவாயா? மனிதர்களுக்குச் செம்மையாகத்தோன்றுகிற பல வழிகள் உண்டு, அதன் முடிவோ மரணம். பாவத்தின் சம்பளம் மரணம்.. ஆகவே இந்த நித்திய மரணத் திற்காகச் சென்று கொண்டி ருக்கும் மனிதர்களுக்கு நித்திவாழ்வை அறிமுகப்படுத்துவாயா?

இறைவனுடைய பெரிய கட்டளை என்ன? நீங்கள் உலகம் எங்கும் சென்று யேசுவைப்பிரசங்கிப்பதல்லவா? இன்றே ஆயத்தப்படுவாயா? கர்த்தர் உன்னோடு இருந்து காரியங்களை வாய்க்கப்பண்ணுவார்.

சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியா மையைச் சுதந்தரிப்பதுமில்லை இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்தி ருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக் கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறை வேறும் (1Cor 15 51-:55)

ஆமேன்.

yennai nadathum yesu nadha

என்னை நடத்தும் இயேசு நாதா:
என்னை நடத்தும் இயேசு நாதா
உமக்கு நன்றி ஐயா
எனக்குள் வாழும் எந்தன் நேசா
உமக்கு நன்றி ஐயா
1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
அழிவில் நின்று பாதுகாத்தீர்
உமக்கு நன்றி ஐயா
2. தேடி வந்தீர் பாட வைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
ஓடி ஓடி உழைக்கச் செய்தீர்
உமக்கு நன்றி ஐயா
3. பாவமில்லா தூயவாழ்வு
வாழச் செய்பவரே
பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
மலரச் செய்பவரே
4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
5. கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
6. உலகம் மாயை எல்லாம் மாயை
உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன்
உறவு பாசம் குப்பையென்றறிந்து
உம்மையே பின் தொடர்ந்தேன்

Singa kuttigal lyrics

சிங்கக் குட்டிகள்
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
1.புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்
2.எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்
3.ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்
4.என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்



Theninimayilum song lyrics

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே - அதைத்
தேடியே நாடி ஓடியே வருவீர், திருச்சபையானோரே
1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே - பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீமனமே
2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் - பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி நீ மனமே
3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் - நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே.
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம் - அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே

Unthan aave enthan lyrics

உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும்
1. உள்ளம் எல்லாம் அன்பினாலே
பொங்கவேண்டும்
கள்ளம் நீங்கி காலமெல்லாம்
வாழ வேண்டும்
2. பாவமான சுபாவம்
எல்லாம் நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி
என்றும் நடத்த வேண்டும்
3. ஜீவ தண்ணீர் நதியாகப்
பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம்
வாழ வேண்டும்
4. வரங்கள் கனிகள் எல்லா நாளும்
பெருக வேண்டும்
வாழ்நாளெல்லாம் பணிசெய்து
மடிய வேண்டும்
5. ஏதேன் தோட்ட உறவு என்றும்
தொடர வேண்டும்
இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு
மகிழ வேண்டும்


Ungal thukkam santhosamaga maarum lyrics

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே, கலங்காதே மகளே
1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்து விடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்.. கலங்கிடவே வேண்டாம்

என் இயேசு கைவிடமாட்டார்
2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கின்றார் (உன்)
3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒரு நாளும் விட மாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பி செல்ல வழி செய்வார் (நீ)
4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக் கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார்நம்
5. மாலையில் மகனே அழுகின்றாயா
காலையில் அக மகிழ்வாய்
நித்திய பேரானந்தம்
நேசரின் சமூகத்திலே
6. அக்கினியின் மேல் நடந்தாலும்
எரிந்து போகமாட்டாய்
ஆறுகளை நீ கடந்தாலும்
மூழ்கி போக மாட்டாய்
7. முழுமையாய் மனம் திரும்பி விடு
முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு
வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு
ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று
எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
எங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்கிடவே மாட்டோம் நாங்கள்
கலங்கிடவே மாட்டோம்


Asaivadum aviye lyrics

அசைவாடும் ஆவியே
அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே (2)
இடம் அசைய உள்ம் நிரம்ப
இறங்கி வாருமே(2)
பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே (2)
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே (2)
அசைவாடும்...
தேற்றிடுமே உள்ங்களை
இயேசுவின் நாமத்தினால் (2)
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால் (2)
அசைவாடும்...
துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால் (2)
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே (2)
அசைவாடும்...


Adimai naan aandavare lyrics

அடிமை நான் ஆண்டவரே
அடிமை நான் ஆண்டவரே
அடிமை நான் ஆண்டவரே - என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்
1.என் உடல் உமக்குச் சொந்தம் - இதில்
எந்நாளும் வாசம் செய்யும்
2.உலக இன்பமெல்லாம் - நான்
உதறித் தள்ளி விட்டேன்
3.பெருமை செல்வமெல்லாம் - இனி
வெறுமை என்றுணர்ந்தேன்
4.வாழ்வது நானல்ல - என்னில்
இயேசுவே வாழ்கின்றீர்
5.என் பாவம் மன்னித்தருளும் - உம்
இரத்தத்தால் கழுவிவிடும்
6.முள்முடி எனக்காக - ஐயா
கசையடி எனக்காக
7.என் பாவம் சுமந்து கொண்டீர் - என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்


Tamil christian wallpapers :2









Oru thaai thetruvathupol

ஒரு தாய் தேற்றுவது போல்
ஒரு தாய் தேற்றுவது போல்
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் - அல்லேலுயா (4)
1.மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
2.கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்
3.எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே
4.ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்

YESU KOODA VARUVAAR

இயேசு கூட வருவார்
இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்
தந்தான தந்தனத் தானானா 2
1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
நொந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்
2. வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்
3. கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்
4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

Click here to download mp3

Yethanai nanmai yethnai inbam

எத்தனை நன்மை எத்தனை இன்பம் :
எத்தனை நன்மை எத்தனை இன்பம்
சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது
1. அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்
முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும்
2. அது சீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும்
இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும்
3. இங்கு தான் முடிவில்லாத ஜீவன் உண்டு
இங்கு தான் எந்நாளும் ஆசீர் உண்டு
4. இருவர் மூவர் இயேசு நாமத்தில் கூடும் போதெல்லாம்
அங்கு நான் இருப்பேனென்று இரட்சகர் சொன்னாரே



vinnappathai ketpavare lyrics

விண்ணப்பத்தைக் கேட்பவரே

விண்ணப்பத்தைக் கேட்பவரே என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
1.உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2.மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்தவரே (செய்பவரே)
3.சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்ஐயா
4.என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்
6.உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே


REVELATION WALLPAPERS


bible verse wallpapers

Revelation 21:4

revelation 1:7

revelation 7:19

Revelation 3:5

Revelation 21:23

Revelation-2:7

Revelation-5:5

Revelation-14:2

Wallpapers Home

Arathipen nan song player (demo)













Vallamayin aviyanavar lyrics

வல்லமையின் ஆவியானவர்:
வல்லமையின் ஆவியானவர் என்னுள்
வந்து விட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்
1.பவர் ஆவி எனக்குள்ளே---- அந்த
பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே------ நான்
அகற்றிவிட்டேன் கசப்புகளை

2.கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை பண்ணி நடத்துகிறார்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான்
3.கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத் தெருவா மணம் வீசுவேன்
மீட்புபெறும் அனைவருக்கும்------ நான்
வாழ்வளிக்கும் வாசனையானேன்
4.உலகத்திற்கு வெளிச்சம்------ நான்
ஊரெல்லாம் அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன்------- நான்
எப்போதும் சுவை தருவேன்
5.கர்த்தரின் முத்திரை என் மேல்------- நான்
முற்றிலும் அவருக்குச் சொந்தம்
அச்சாரமாய் ஆவியானவர்------- நான்
நிச்சயமாய் மீட்பு பெறுவேன்
6.தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை
கர்த்தரே பாதுகாக்கிறார்
தீயோன் என்னை தீண்டுவதில்லை
7.கடவுள் எனக்கு வாக்களித்ததை
நிறைவேற்ற வல்லவரென்று
நிச்சயமாய் நம்பினதாலே------ நான்
நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்)


Santhosam ponguthey lyrics

சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
1. வழி தப்பி நான் திரிந்தேன் பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே
2. சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
அந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே
3. பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில் நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன்



koodume ellaam koodume lyrics

கூடுமே எல்லாம் கூடுமே:
கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை

1.கடல் மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே
2.செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா
யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா
3. மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா
4. உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா
உம் பெயரால் கைநீட்டினால் நோய்கள் மறையுதையா
5. மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா
6. வனாந்தர பாதையிலே ஜனங்களை நடத்தினீரே
கற்பாறை கன்மலையை நீரூற்றாய் மாற்றினீரே
7. உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டுகிறீர்
கரையும் காகங்களுக்கு இரை கொடுத்து மகிழ்கிறீர்
8. பகலை ஆள்வதற்கு கதிரவனை உருவாக்கினீர்
இரவை ஆள்வதற்கு விண்மீனை உருவாக்கினீர்

THE SIGN OF HOLYSPIRIT

பரிசுத்த ஆவியின் முத்திரை
நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு விசுவாசிகளான போது ,வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள்முத்திரை போடப்பட்டீர்கள் அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமாயிருக்கிறார் . (எபேசியர் 1 : 13 , 14 )
இரட்சிக்கப்பட்டு விசுவாசியாக மாற்றப்பட்ட உடன் பரிசுத்த ஆவியானவரால் முத்திரை தரிக்கப்படுகிறோம் என்று மேற்கண்ட வசனம் நமக்கு சொல்லுகிறது .அந்த பரிசுத்த ஆவியானவரின் முத்திரை தான் இயேசு கிறிஸ்துவின் வருகையில் நாம் மிட்கப்படுவோம் என்பதற்கு அடையாளம் என்று வேதம் சொல்கிறதே . நம்மை இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுத்துகிறவரும் இந்த பரிசுத்த ஆவியானவர்தான் நம்மை இயேசுவை போல் மாற்றி அவர் வருகையில் நம்மை மருரூபப்படுத்தி சேர்கிறவரும் இந்த பரிசுத்த ஆவியானவர்தான் கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக்கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம் (2 Corinthians 3:17-18). மேற்கண்ட வசனத்தில் ஆவியானவர் தான் நம்மை இயேசுவின் சாயலுக்கு மறுருபப்படுத்துகிறவர் என்று வேதம் சொல்கிறது 1கொரிந்தியர் 15 : 51 , 52 -ல்இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் நம்மை மறுருபப்படுத்தி இயேசு கிறிஸ்துவோடு நம்மை கொண்டு போய் சேர்கிறார் 1தெசலோனிக்கேயர்4:16,17 ல் கடைசி எக்காளம் தொனிக்கும் போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களையும் உயிரோடு இருந்து கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களையும் இயேசுவோடு கொண்டு போய்விட்டு எப்போழதும் இயேசுவோடு இருக்கச்செய்கிறார் இந்த பரிசுத்த ஆவியானவரே.-பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையில் செய்கிற பல அனுபவங்களை பார்த்தோமே.அப்படியானால் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் எவ்வளவு முக்கியம்.அந்த அபிஷேகம் ஒரு பொக்கிசம் தானே.இதை வாசிக்கின்ற தேவபிள்ளையே,அப்படிப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை இன்றே தேவனிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.லூக்கா11:13 -ல் பரிசுத்த ஆவியை கேட்பவர்களுக்கு பிதாவானவர் அந்த பரிசுத்த ஆவியை கொடுப்பார் எனறு சொன்னாரே.ஆகவே கேட்ப்போம் ,இயேசுவை போல் மாறி அவருடைய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவோம்

biblical wallpapers






Kartharayea nambi jeevipom

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக்கொள்வோம்
1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனை கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் 2
கர்த்தரை
2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய் காத்திடுவார் 2
கர்த்தரை
3. நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசீர் வந்திறங்குமே
கிருபை, நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே 2
கர்த்தரை

JEBATHOTTA JEYAGEETHANGAL LYRICS:JEBATHOTTA JEYAGEETHANGAL LYRICS:

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே
வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
1. உன்னதமான கர்த்தரையே
உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை
ஆதாயமாக்கிக் கொண்டாய்
2. ஆட்டுக்குட்டி இரத்ததினால்
சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு
அன்றாடம் வெற்றி உண்டு நமக்கு
3. கர்த்தருக்குள் நம் பாடுகள்
ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன்
அதிகமாய் செயல்படுவோம்
4. நம்முடைய குடியிருப்பு
பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை
எதிர்நோக்கி காத்திருப்போம்
5. அழைத்தவரோ உண்மையுள்ளவர்
பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்
குற்றமின்றி காத்திடுவார்
6. அற்பமான ஆரம்பத்தை
அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார்
சொன்னதை செய்திடுவார்
7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல
ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்
album:jebathotta jeyageethangal

Tamil bible study

பரிசுத்த ஆவியானவரின் முக்கியத்துவம்
"நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப்போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக." (1 John 2:27). நாம் இயேசு கிறிஸ்து மூலமாக பெற்ற இந்த பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் சகலத்தையும் குறித்து நமக்கு போதிக்கிறது. அந்த அபிஷேகம் போதித்த படியே கிறிஸ்துவில் நிலைத்திருப்பீர்களா என்று மேற்கண்ட வசனம் நமக்கு சொல்கிறது. இயேசு கிறிஸ்துவுக்குள் நம்மை நலைத்திருக்க செய்கிறவர் இந்த பரிசுத்த ஆவியானவர். இயேசு கிறஸ்துவக்குள் நாம் நிலைத்திருக்கும் படியாக நமமை இவர் போதித்து நடத்துகிறார் "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்,... (John 15:4). என்று இயேசு சொன்னார். நம்மை கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கச்செய்து கிறிஸ்துவை நம்மில் நிலைத்திருக்கச்செய்கிறவர் இந்த பரிசுத்த ஆவியானவர் அப்படியென்றால் முடிவு பரியந்தம் கிறிஸ்துவில் நலைத்திருக்க வேன்டுமானால் இந்த பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் நமக்கு மிகவும் தேவை

kumbidugiren nan kumbidugiren lyrics

,
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் இறைவா இறைவா கும்பிடுகிறேன்
சர்வத்தையும் படைத்த சர்வ வியாபியே-2
சரோனின் ரோஜா லீலீ புஸ்பம் உம்மை நான் கும்பிடுகிறேன்-2
-கும்பிடுகிறேன்
மகிமையின் மன்னவனே மகத்துவ ராஜனே-2
மாறாத தேவன் மரித்து உயிர்தீர் உம்மை நான் கும்பிடுகிறேன்-2
-கும்பிடுகிறேன்
வல்லமையின் தெய்வமே வாழவைக்கும் வள்ளலே -2
வானத்து மன்னா வாழ்வின் ஜோதி உம்மை நான் கும்பிடுகிறேன்-2
-கும்பிடுகிறேன்,


bible study

இயேசு கிறிஸ்து ஏன் மானிடராய் பிறந்தார்
தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி அவரைத்தந்தருளி உலகத்தில் இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் என்று வேதம் சொல்கிறது யோவான் (14:6)
,பாவத்தில் வாழுகிற மனித சமுதாயத்தை, பாவத்திலிருந்து மீட்டு பரலோக இராஜ்யத்தில் (நித்திய ஜுவன்) கொண்டு போய் சேர்கவே தேவன் தமமுடைய ஒரே பேரான குமாரன் இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பினார்.
எந்த மனதனும் இயேசு கிறிஸ்து மூலமாகவே மட்டும் பிதாவாகிய தேவனிடம் சேரமுடியும் "அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (John 14:6).।என்று இயேசு சொன்னாரே .
ஆகவே நம்மை பரலோக இராஜியத்திற்கு கொண்டு செல்லத்தான் இயேசு மத்திய வானத்தில் வந்து நிற்பார்.
அதாவது மணவாட்டியாகிய சபையை அழைத்து செல்ல இயேசு கிறிஸ்து மணவாளனாக வருவது தான் இரகசிய வருகை அப்பொழுது இயேசு கிறிஸ்து மத்திய வானத்தில் வந்து நிற்பார்

Rev.Moses Rajasekar video songs

   SONG:Divalaiya devalu




   SONG:Rajathi rajanukku




   SONG:Kattina veedu pala


   SONG:Arputha Yesu Nathane


THANKS FOR WATCHING ALL THE SONGS

Tamilchristian wallpapers


bible verse wallpapers


Tamil christian wallpapers





















Tamil christian wallpapers


bible verse wallpapers


Tamil christian wallpapers


psalm:119:105

2corinthians

psalm:5:3

Isiah:52:12

Isiah:49:15

Isiah:42:16

Isiah:32:18

psalm:128:5


Newerpost Older post Home