இன்றைய வசனம்

Vallamayin aviyanavar lyrics

வல்லமையின் ஆவியானவர்:
வல்லமையின் ஆவியானவர் என்னுள்
வந்து விட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்
1.பவர் ஆவி எனக்குள்ளே---- அந்த
பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே------ நான்
அகற்றிவிட்டேன் கசப்புகளை

2.கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை பண்ணி நடத்துகிறார்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான்
3.கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத் தெருவா மணம் வீசுவேன்
மீட்புபெறும் அனைவருக்கும்------ நான்
வாழ்வளிக்கும் வாசனையானேன்
4.உலகத்திற்கு வெளிச்சம்------ நான்
ஊரெல்லாம் அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன்------- நான்
எப்போதும் சுவை தருவேன்
5.கர்த்தரின் முத்திரை என் மேல்------- நான்
முற்றிலும் அவருக்குச் சொந்தம்
அச்சாரமாய் ஆவியானவர்------- நான்
நிச்சயமாய் மீட்பு பெறுவேன்
6.தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை
கர்த்தரே பாதுகாக்கிறார்
தீயோன் என்னை தீண்டுவதில்லை
7.கடவுள் எனக்கு வாக்களித்ததை
நிறைவேற்ற வல்லவரென்று
நிச்சயமாய் நம்பினதாலே------ நான்
நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்)


No comments:

Post a Comment

Newerpost Older post Home