இன்றைய வசனம்

இயேசுவின் நாமமே திருநாமம்

இயேசுவின் நாமமே திருநாமம்
இயேசுவின் நாமமே திருநாமம் - முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்.
1. காசினியில் அதனுக் கிணையில்லையே - விசு
வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே.
2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் - அதை
நித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம்.
3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் - இது
சத்திய விதேய மனமொத்தநாமம்.
4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம் - நமை
அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம்.
5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி - பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி.

Psalm 100-5 wallpaper

ஆகாதது எதுவுமில்லை

ஆகாதது எதுவுமில்லை
ஆகாதது எதுவுமில்லை – உம்மால்
ஆகாதது எதுவுமில்லை
அகிலம் அனைத்தையும்
உண்டாக்கி ஆளுகின்றீர்
1. துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
2. அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று
நடந்தானே இயேசு நாமத்தில்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
3. கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
4. கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
5. ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று
இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
6. எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையவில்லையே
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
7. ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே
சேதமின்றிக் காப்பாற்றினீர்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
8. கானவ+ரில் வார்த்தை சொல்ல கப்பர்நாகூம் சிறுவனங்கே
சுகமானான் அந்நேரமே
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
9. தண்ணீரால் ஜாடிகளை கீழ்படிந்து நிரப்பினதால்
திராட்சை ரசம் வந்ததையா
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்

Thuthi FM

Please Click Play button to hear Thuthi fm

Psalm-23-1 Wallpaper

Biblical Wallpaper Psalm:23:1

Akkini abisegam Eenthidum

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்:
1. பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
உந்தன் சீஷருக்களித்தீரெ
அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி

உமக்கு நன்றி ஐயா
2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்
தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே
இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி
3. அன்பர் இயேசுவின் நாமத்திலே
வன் துயர் பேய் பிணி நீங்கவே
அற்புதம் அடையாளம் நிகழ்ந்திடவே
பொற்பரன் ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி
4. வானில் இயேசு வருகையிலே
நானும் மறுரூபம் ஆகவே
எந்தன் சாயல் மாறிடவே
மைந்தன் ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி



Newerpost Older post Home