இன்றைய வசனம்

Aandavare um paatham

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்அடிமை நான் ஐயா
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அகன்று போக மாட்டேன் உம்மை விட்டு
அகன்று போக மாட்டேன்
1. ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு
அதன்படி நடக்கின்றேன்
உலகினை மறந்து உம்மையே நோக்கி
ஓடி வருகின்றேன்
2. வாலிபன் தனது வழிதனையே
எதனால் சுத்தம் பண்ணுவான்
தேவனே உமது வார்த்தையின்படியே
காத்துக் கொள்வதனால் சங் 119:9
3. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும் சங் 119:18
4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
தீபமே உம் வசனம்
செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
தேவனே உம் வாக்கு சங் 119:105
5. தேவனே உமக்கு எதிராய் நான்
பாவம் செய்யாதபடி
உமது வாக்கை என் இருதயத்தில்
பதித்து வைத்துள்ளேன்
song:akkini nerupai lyrics
album:jebathotta jeyageethangal
by fathers.j.berchmans

Akkini nerupaai song lyricsAkkini nerupaai song lyrics

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்அபிஷேகம் தந்து வழிநடத்தும் (2)
1. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்து பேசினீரே (2)
எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே - (2)
எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் .. இன்று (2)
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
2. எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய் (2)
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே - (2)
எங்களின் குற்றங்களை எரித்து விடும் - (2)
3. ஏசாயா நாவை தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும் (2)
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே - (2)
எங்களை அனுப்பும் தேசத்திற்கு - (2)
4. அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே (2)
அன்னிய மொழியை பேச வைத்தீரே - (2)
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே - (2)
5. இரவு நேரத்தில் நெருப்புத் துணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே - (2)
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட - (2)
எங்களை நிரப்பும் ஆவியினால் - (2)
song:akkini nerupai lyrics
album:jebathotta jeyageethangal
by father.s.j.berchmans

Aayathama song lyrics

ஆயத்தமா? ஆயத்தமா?
ஆயத்தமா? ஆயத்தமா?ஆயத்தமா? ஆயத்தமா?(2)
இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா
அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா?(2)
ஆயத்தமா? ஆயத்தமா? ஆயத்தமா? ஆயத்தமா?
மணவாட்டி போல நீ காத்திருந்தால்
அவர் நாமத்தை தினமும் போற்றியிருந்தால்(2)
மேகங்கள் மீதினில் வந்திடுவார் உன்னை
மோட்சதிற் அழைத்து சென்றிடுவார்(2)
ஓ..உஓ... ஓ..உஓ... ஓ..உஓ...ஓ..

புவியை வெறுத்திட ஆயத்தமா?
அந்த பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா(2)
நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் உன் பாவங்கள் இன்று தலை தூக்கினால்(2)
பரலோக கனவுகள் பாழாகுமே
உந்தன் பாடுகள் அனைத்துமே வீணாகுமே(2)ஓ..உஓ... ஓ..உஓ... ஓ..உஓ...ஓ..
நேற்றை போல் இன்றும் நீ ஆயத்தமா?
அட இன்றை போல் நாளையும் ஆயத்தமா ‍‍- ஆயத்தமா


Ratchagarin geethangal volume1



ratchagarin_geethangal


ABOUT THE THE ALBUM
The entire album can be download freely. But, please remember it is not produced freely, Why not you support to this non-profitable free download Org. ministries, God will happy and repay to those who are supported to His mighty ministries

Albums:


Ratchagarin Ratchippin Geethangal volume-1
Ratchagarin Ratchippin Geethangal volume-2 part-1
Ratchagarin Ratchippin Geethangal volume-2 part-2

All the above album composed and produced by

THE VOICE OF GOD MINISTRIES

Pastor. David Samuel
For Contact:
Bro. David. Samuel
Voice of God
A.56 Jai Nagar, Thiruverumbur,
Thrichirapalli - 620013.
India.

Email: thevoiceofgod.india@gmail.com
Phone: +91 431 2510949
Cell: +919442502949
Thanks to pastor David Samul.




Ratchagarin geethangal volume1


SongsDownload Link
1.AdisayamaanavarDownload
2.China pillaiyanaDownload
3.Naan pesum muthal vaarthaiDownload
4.Yesu rajan vaanilDownload
5.Deva ummai thediDownload
6.kaalai vanthathumDownload
7.Alla alla kurayathathuDownload
8.Mahimai thuravantharamDownload
9.Thavidai polaDownload
10.ArathipomDownload

Tamil christian songs



Tamil christian gospal songs


SongsDownload Link
Unnathan naamamDownload
ThanthenDownload
Santhosama irungaDownload
Pathai katuvaarDownload
Maraidatha Download
Manithane Nee engeDownload
KuyavaneDownload
DhasareahDownload
Anbana nadhanamDownload
ArathipomDownload
Ullam UrugiDownload
Kaalam VeegamaiDownload

எந்தன் அன்புள்ள ஆண்டவர்

எந்தன் அன்புள்ள ஆண்டவர்
1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வம் நீரே
பல்லவி
ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே
2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே
3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே
4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே
5. பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே
போதும் எனக்கு நீரே


psalm wallpapers


bible verse wallpapers

PSALM WALLPAPERS













Courtesy www.free-wallpaper-christian.com

Wallpapers Home


Thuthithu paadida song lyrics

துதித்துப் பாடிட பாத்திரமே
1. துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசஞ்செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே
பல்லவி
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
2. கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததாலே ஸ்தோத்தரிப்போமே --- ஆ! அற்புதமே
3. அக்கினி ஊடாய் நடந்தாலும்
ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்
சோதனையோ மிகப் பெருகினாலும்
ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே
4. இந்த வனாந்திர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே
5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே


Enniladangaa sthothiram song lyrics

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்
எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே
1. பூமியில் வாழ்கின்ற யாவும்
அதின் மேல் உள்ள ஆகாயமும்
வான்தூதர் சேனைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே
2. சூரிய சந்திரரோடே
சகல நட்சத்திர கூட்டமும்
ஆகாயப் பறவைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே
3. காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனித் தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மைப் போற்றுதே
4. பாவ மனுக்குலம் யாவும்
தேவா உம் அன்பினை உணர்ந்தே
சிலுவையின் தியாகத்தைக் கண்டு
ஒயா துதி பாடுதே


kanmani nee kanvalrai lyrics

கண்மணி நீ கண்வளராய்
கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்
1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ
2. சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ
3. வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ


kaalayum maalayum lyrics

காலையும் மாலையும்
பல்லவி:
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்
அனுபல்லவி
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
பாடிடும் தொனி கேட்குதே
சரணங்கள்
1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன் --- காலையும்
2. எனக்கெதிராய் ஓர் பாளையமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன்; எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார் --- காலையும்
3. ஒன்றை நான் கேட்டேன் , அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன் --- காலையும்
4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல் --- காலையும்
5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
தயவாகப் பதிலளிப்பார் --- காலையும்
6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே
என்றென்றும் காத்திருக்கும் --- காலையும்
7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
என் கர்த்தர் வாக்கு மாறிடார்
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் விருப்பமும்
தவறாமல் நிறைவேற்றுவார் --- காலையும்


Santhosam ponguthey

சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் பொங்குதே (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
1. வழி தப்பி நான் திரிந்தேன் - பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே --- சந்தோஷம்
2. சத்துரு சோதித்திட தேவ
உத்திரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல ஏசு எந்தன்
சொந்தமானாரே --- சந்தோஷம்
3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
அவரும் பரலோகத்தில்
ஆண்டவரோடு வாழவே
நானும் தேவ அன்பையே
நாளும் கூறிடுவேன் --- சந்தோஷம்


Kartharai nambiye jeevipom

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்
1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் --- கர்த்தரை
2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன்மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார் --- கர்த்தரை
3. உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய்க் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் --- கர்த்தரை


Yentha kaalathilum tamil christian song lyrics

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
பல்லவி

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்
சரணங்கள்
1. ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நேரே ---எந்த
2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே --- எந்த
3. வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே
4. வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே --- எந்த
5. துன்ப நேரத்தில் இன்பமும் நேரே
இன்னல் வேளையில் - என் மாறிடா நேசர் --- எந்த
6. ஞான வைத்தியராம் - ஔஷதம் நீரே
ஆத்ம நேசராம் - என் நண்பரும் நீரே --- எந்த
7. ஞானமும் நீரே - தானமும் நீரே
நியாமமும் நேரே - என் நாதனும் நீரே ---- எந்த
8. ஆறுதல் நீரே - ஆதாரம் நீரே
ஆசையும் நீரே - என் ஆனந்தம் நீரே --- எந்த
9. மீட்பரும் நீரே - என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே --- எந்த
10. தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே --- எந்த


Yesuvin naamam inithana

இயேசுவின் நாமம் இனிதான நாமம்
பல்லவி :
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்
சரணங்கள்
1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் --- இயேசுவின்
2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் --- இயேசுவின்
3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் --- இயேசுவின்
4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் --- இயேசுவின்
5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் --- இயேசுவின்
6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் --- இயேசுவின்
Download song

Unnatha maanavarin

உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்
1. உன்னதமானவரின் - உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே
பல்லவி
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்
2. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே --- அவர்
3. இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் --- அவர்
4. ஆயிரம் பதினாயிரம்
பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே --- அவர்
5. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் --- அவர்
6. உன் வழிகளிலெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார் --- அவர்
7. சிங்கத்தின் மேலும் நடந்து
வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்து காத்திடுவார் --- அவர்
8. ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் --- அவர்


Idtho manusarin mathil devaathi devanae

இதோ மனுஷரின் மத்தியில்
பல்லவி
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே !
1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் - தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! --- இதோ
2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் - தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே ! --- இதோ
3. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தல மதுவே
என்றும் துதியுடனே - அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே ! --- இதோ
4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடு மிச் - சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே ! --- இதோ
5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் --- இதோ


Mahibanai thedi volume2



Mahibanai thedi vol2


SongsDownload Link
Alleluea Download
Anbin ThevanDownload
AzhaikiraarDownload
Ennai MaravaDownload
Iraivan Download
Kaikalaal Download
Santosa GeethamDownload
Santhosam pongutheyDownload
DevalogamDownload
YesuvinDownload
Note:The above songs are poor in quality for better quality buy Dvd or cd

YUTHA RAJA SINGAM UYIRTHELUNDHAAR LYRICS

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்

1. வேதாள கணங்கள் ஓடிடவே
ஓடிடவே, உருகி வாடிடவே
2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே, பரனைத் துதித்திடவே
3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன
4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே
5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார்
6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை
7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம்



MAHIBANAI THEDI VOLUME:1


China chiru suthane
Josesinfotech
Volume:Mahibanai thedi vol1

Singer:priya

Size:3.1MB   Download
Enthananbulla
Josesinfotech
Volume:Mahibanai thedi vol1

Singer:spelmen

Size:3.1MB   Download
Kaanatha aatin pinne
Josesinfotech
Volume:Mahibanai thedi vol1

Singer:jesintha

Size:3.2MB   Download
Maarathavar
Josesinfotech
Volume:Mahibanai thedi vol1

Singer:---

Size:3.0MB   Download
Namthevanai
Josesinfotech
Volume:Mahibanai thedi vol1

Singer:Jesintha

Size:3.4MB   Download
Nee iraivanai
Josesinfotech
Volume:Mahibanai thedi vol1

Singer:Jafi

Size:3.1MB   Download
Allelua Aananthame
Josesinfotech
Volume:Mahibanai thedi vol1

Singer:---

Size:2.8   Download
Kanmani nee
Josesinfotech
Volume:Mahibanai thedi vol1

Singer:Jafi

Size:3.0MB   Download

Anuthinamum ummil naan song mp3

Anuthinamum ummil naan
volume:---
Singer:----
mp3 size:4.2B
Length:4minutes
play video  Download mp3

Thiruppatham nambi vanthen song lyrics

திருப்பாதம் நம்பி வந்தேன்
திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே
1. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன்
2. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே
3. மனம் மாற மாந்தன் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்
4. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே
5. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே
6. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னை தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே
7. விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீர பாதை காட்டிடுமே
வளர்ந்து கனி தரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்.

Sarvalogaathiba namaskaram

சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்!
2. திரு அவதாரா, நமஸ்காரம்!
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
தரணியில் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோர், நமஸ்காரம்!
3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
பரம சற்குருவே, நமஸ்காரம்!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்
4. முத்தொழிலோனே, நமஸ்காரம்!
மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்!
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்திய திரியேகா, நமஸ்காரம்

Enthan naavil puthu paatu song lyrics

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில்
1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார்
2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டித்துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார்
3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார்
4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன்
5. இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன

En uyirana yesu song lyrics

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
1. உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே
2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா!
உம் வசனம் தியானிக்கிறேன்
3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பேனே

Arathipen nan song lyrics

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்
3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்
4. தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்
5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்
6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

Adaikalame unathadimai naane

அடைக்கலமே உமதடிமை நானே
அடைக்கலமே உமதடிமை நானே
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே - ஆ
கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமதே - ஆ
என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோரைக் கிருபை சூழ்ந்து கொள்ளுதே - ஆ
கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னைக் குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றி விட்டீர

ATHIKAALAI STHOTHIRA BALI

அதிகாலை ஸ்தோத்திர பலி
அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான் - 2
1. எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவி செய்தீர்
இதுவரை உதவி செய்தீர்
எபிநேசர் எபிநேசர்
2. பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே
பரிசுத்தர் பரிசுத்தர்
3. எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே
எல்ஷடாய் எல்ஷடாய்
4. எல்ரோயி எல்ரோயி
என்னை காண்பவரே
என்னை காண்பவரே
எல்ரோயி எல்ரோயி
5. யேகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யேகோவா யீரே
6. அதிசய தெய்வமே
ஆலோசனை கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே
அதிசய தெய்வமே
7. யேகோவா ஷம்மா
எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே
யேகோவா ஷம்மா
8. யேகோவா ஷாலோம்
சாமாதானம் தருகிறீர்
சாமாதானம் தருகிறீர்
யேகோவா ஷாலோம்
9. யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்
எந்நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே
10. யேகோவா ரஃப்பா
சுகம் தரும் தெய்வம்
சுகம் தரும் தெய்வம்
யேகோவா ரஃப்பா

Anuthimanum ummil naan valarnthidave lyrics

அனுதினமும் உம்மில் நான்
பல்லவி
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம் தரவேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மாலே கூடும்
என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம்
ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே
உணர்ந்தேன் என் இயேசுவே
அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே
ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே
download song

Jebathottal jeyageethangal songs

AKKINI NERUPPAI IRANGI VAARUM
volume:Jebathotta jeyageethangal
Singer:s.j.berchmans
mp3 size:4.6MB
Length:5minutes
play video  Download mp3


ATHIKAALAI STHOTHIRABALI
volume:Jebathotta jeyageethangal
Singer:s.j.berchmans
Mp3 size:6.3MB
Length:6minutes
play video   Download mp3
Newerpost Older post Home